தேசிய விருது கிடைக்காததற்கு முதன் முதலாக பதிலடி கொடுத்த யுவன்

யுவன் ஷங்கர் ராஜா தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளர். இவர் தற்போது ராம் இயக்கிய பேரன்பு படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை மெய் மறக்க வைத்துள்ளது, இந்நிலையில் இவர் புதுப்பேட்டை, கற்றது தமிழ், பருத்தீவிரன், தங்க மீன்கள், தரமணி என பல தரமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஆனால், இவருக்கு தேசிய விருது கிடைத்ததே இல்லை, ஒரு சிலர் யுவனை வேண்டுமென்றே புறக்கணிக்கின்றனர் என்று கூட சொல்வார்கள்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் நேற்று பேரன்பு இசை வெளியீட்டு விழாவில் இதை கேட்க, அதற்கு யுவன் ‘நான் ஒருநாளும் விருதுகளுக்காக இசையமைத்தது கிடையாது.

உங்கள் அன்பும், கைத்தட்டல் தான் எனக்கு கிடைத்த மிகப்பெரும் விருது’ என சொல்ல அரங்கமே அதிர்ந்தது.