சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 99 வயது முதியவர்…வயதான காலத்தில் இதெல்லாம் தேவையா?

சென்னை பூவிருந்தவல்லி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்த 99 வயது முதியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னைபூவிருந்தவல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். 99 வயதான இவர் அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

இவரது வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் சிறுமிக்கு பரசுராமன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

இதன் பேரில் முதியவர் பரசுராமனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.