ஆத்திரத்தில் 8 மாத குழந்தையை கொன்ற தந்தை – அதிர வைக்கும் காரணம்

மதுரை சோழவந்தான் அருகே தகாத உறவை மனைவி கண்டித்ததால் 8 மாத குழந்தையை கழுத்து நெறித்து கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மச்சியாபுரத்தை சேர்ந்த அஜித்குமார், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்து அவரது மனைவி செல்வி தயார் வீட்டில் குழந்தையுடன் 4 மாதங்களாக தங்கியுள்ளார். ஞாயிறன்று சமாதானம் செய்வது போல் வந்த அஜித்குமாரும் அவனது நண்பன் மணி ஆகியோர் குழந்தையை வாங்கிக்கொண்டு தனியாக சென்றனர்.

கயிற்றால் குழந்தையின் கழுத்தை நெறுத்து கொன்றுவிட்டு, மயங்கிய நிலையில் செல்வியிடம் குழந்தையை கொடுத்துள்ளனர். சந்தேகமடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

குழந்தையை காட்டி மனைவி பிரச்சனை செய்தததால் இரண்டாவது திருமணத்திற்கு இடையூறாக இருக்கும் என்று கருதி குழந்தையை கொன்றதாக அஜித்குமாரும், அவனது நண்பன் மணியும் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.