ஒதுக்கான கிராமமா? ஒதுக்கப்பட்ட கிராமமா?

எங்­கட நிலைமை வர­வர மோச­மா­கிக்­கொண்டே வரு­குது எண்­டதை நினைக்க ஆத்­தி­ர­மாத்­தி­ர­மா­யெல்லே வரு­குது. வக்­கிர புத்­தி­யும் அதுக்குப் பாது­காப்­பும் கிடைக்­கி­ற­தா­லை­தான் உது கட்­டுப்­பா­டே­யில்­லாம வள­ருது. அப்­பி­டிச் சொல்லி ஆற­வேண்­டி­ய­தை­விட என்­ன­தான் செய்­யி­றது? வய­து­போன பொம்­பி­ளை­யளே வாழ­மு­டி­யாத நல்­ல­தொரு காலத்­தைத்­தானே கையிலை கொண்டு திரி­யி­றம். ‘நல்­லாட்சி’ நல்­ல­ப­டியா நடக்­கி­ற­துக்கு இது­கள் தேவை­யெல்லே? அவன் ஞான­சா­ர­தே­ரோக்­குப் பிறந்­தது மாதி­ரி­யான ஞானமாவது எங்­கட ஆக்­க­ளுக்­குப் பிறக்க எல்­லாக் கட­வு­ளை­யும் கும்­பி­டு­வம். வேற என்­னத்­தைச் சொல்ல? என்­னத்­தைச் செய்ய?

போன கிழமை றெஜினா எண்ட பிஞ்­சின்ர கதை­யோட போட்­டுது. பேப்­பர்­க­ளி­லை­யும் முன்­பக்­கத்­துக்­குக் காணக்­கூ­டி­ய­தா­யி­ருந்­த­தல்லே? பிறகு போராட்­டங்­கள், அறிக்­கை­யள் எண்­டு­வலு ஆர்ப்­ப­ரிப்­போ­டை­போச்­சுது பாருங்கோ! காட்டுப்புலத்தை ஒதுக்­கான கிரா­மம் எண்­ட­தை­விட ஒதுக்­கப்­பட்ட கிரா­மம் எண்­டும் சொல்­ல­லாம். அதுக்­குக் கார­ணங்­கள் கனக்­கக் கிடக்­கு­தெண்டு பொன்­னாலை ராச­லிங்­கம் சொன்­னது சரி­தான்.

அரச, தனி­யார் நிறு­வ­னங்­க­ளின்ர மற்­றது சம­யக்­கா­ற­ரின்ர உத்­தி­யோ­கத்­தர்­மார் எத்­தி­னை­பேர் இந்­தக் கிரா­மத்­திலை முழு­நே­ர­மாய் வேலைக்­கெண்டு இருக்­கி­னம்? அது கிட்­டத்­தட்ட கிரா­மத்­துச் சனத்­தின்ர மூண்­டு­நாலு பேருக்கு ஒராள் எண்­டு­தான் இருக்­கும். ஆனால் கசிப்பு, கஞ்சா உட்­பட்ட போதைப் பழக்­கங்­கள், இள­வ­ய­துக் கலி­யா­ணம், பல தாரங்­கள், முறை­தப்­பின உற­வு­கள் அது­வி­து­வெண்டு சமூ­கத்­துக்கு உத­வாத அத்­த­னை­யும் உள்ள கிரா­மங்­க­ளிலை அது­வும் ஒண்­டெண்டு சொல்­லிப்­போட்டு இருக்க முடி­யா­தல்லே? இது­களை மாத்­தி­ற­துக்­கான யோசி­னை­யா­வது ஏதா­லு­மி­ருக்­கோண்டு தெரி­யாது.

அர­சி­யல்­வா­தி­யள், அமைச்­சர்­மார், அதி­கா­ரி­யள் ஆருமே அந்­தக் குழந்­தை­யின்ர கொலைக்­குப் பிற­கா­வது அங்க போயி­ருக்­க­லாம். ஆனால், அப்­பிடி நடக்­க­யில்லை. சனம் கொதி கொதி­யெண்டு கொதிச்­ச­தா­யல்லே பேப்­ப­ரு­க­ளிலை வந்­தது. நான் முதல்ல சொன்ன மாதி­ரி­யான சமூ­கப் பிரச்­சி­னை­ய­ளா­லை­யும் திட்­ட­மி­டாத வாழ்க்கை முறை­யா­லை­யும் வறுமை கூத்­தா­டு­கிற ஊரல்லே. அங்க போய் என்ன இலா­ப­மெண்டு விட்­டி­ருக்­க­லாம். ‘‘வித்தியா கொலை­யிலை சம்­பந்தப்பட்டதுகள் பெரிய இடங்­கள் எண்­ட­தாலை எல்­லா­ரு­மல்லே அடிச்­சுப் பிடிச்­சுக்­கொண்டு முன்­னுக்கு நிண்­டவை’’ இது நானில்லை. கன­க­னின்ர கதை. காத்­தி­கே­சண்­ணை­யும் அதைத்­தான் சொல்­லு­றார்.

எல்­லா­ரு­மி­ருந்­தும் இல்­லாத கிரா­மம். அங்­க­கூட சரி­யான தலை­மைத்­து­வம் இல்லை. சொல்­வழி கேக்­கிற பழக்­கம் பொது­வாயே எங்­கட ஆக்­க­ளிட்ட இல்­லைத்­தானே. அங்­க­யும் அது­தான் நிலை. அந்­தப் பிள்­ளை­யின்ர கொலைக்கு நியா­யம் கேட்டு ஒரு போராட்­டத்­தைக் கூடச் சரி­யாய் ஒழுங்கு செய்­து­கொள்ள முடி­யாத ஒரு சமூ­க­மா­யி­ருக்­குது. கவ­லை­தான். இது­களை உணந்து சமூ­கத்­துக்­குள்ள தங்­க­ளை­யும் இணைக்­கக்­கூ­டி­ய­தாய் தங்­களை மாற்­று­கிற உணர்­வை­யா­வது பெற­வே­ணும். உப்­பி­டியே இருக்­கே­லா­தல்லோ?

எதிர்ப்­புப் போராட்­டம் செய்­யி­ற­தி­லை­கூடச் சரி­யாச் செய்­யக்­கூ­டிய சரி­யான வழி­காட்­டலோ, ஒத்­து­ழைப்போ கிட்­டா­த­ ள­வுக்கு இருக்­கி­றது கவ­லை­தான். போக்­கு­வ­ரத்தை மறிச்சு ஒரு எதிர்ப்­போடை விழிப்­பூட்­ட­லை­யும் செய்­யி­ற­தைக்­கூட வெறும் ஒரு காரை­ந­கர் பஸ்ஸை மறிக்­கி­ற­தாலை செய்­யே­லுமோ எண்டு யோசிக்­க­யில்லை. சுழி­பு­ரம் சந்­தி­யிலை கூடு­ற­தாலை வெளி­யு­ல­கத்­துக்­குச் செய்தி எந்­த­ளவு போகு­மெண்­ட­தைக்­கூடக் கணிப்­பிட முடி­யா­ம­லிருந்­த­தைக் காணச் சரி­யான கவ­லை­யா­யி­ருந்­துது.

எங்­கட ஆக்­க­ளின்ர பொறுப்­பு­ணர்ச்சி எண்­டு­ற­துக்கு இது நல்ல உதா­ர­ணம். சிறுமி கொலைக்கு நீதிவேண்­டி­யும் போதை எதிர்ப்புக்கும் எண்­டு­சொல்லி ஒரு கடை­ய­டைப்பும், கர்த்­தா­லும், பேர­ணி­யும் வெள்­ளிக்­கி­ழமை நடந்­த­தல்லே? அந்­தப் பேர­ணி­அண்­டைக்கு அத்­தி­யா­வ­சி­யப் பொரு­ளு­கள் விக்­கிற எல்­லாக் கடை­ய­ளும் மூடி­யி­ருந்­த­தைக் காணக் கூடி­ய­தா­யி­ ருந்­துது. ஊர்­வ­லம் ஏ.ஜி.ஏ ஒவ்­பீ­ஸ் நோக்கிப் போய்க் கொண்டிருந்த பாதை­யிலை சங்­கானை பெருங் குடி­மக்­கள் தாக­சாந்தி நிலை­யம் திறந்­தி­ருந்­ததை எத்­தினை பேர் பாத்­திச்­சி­னமோ தெரி­யேல்லை? மண்­டி­கைக் குளத்­துக்கு முன்­னா­லை­ யி­ருக்­கிற சாரா­யக்­க­டை­யைத்­தான் சொல்­லு­றன். அது மட்­டும் அண்­டைக்­குத் திறந்­தி­ ருந்­துது.

றிப்­போட்டர்மார் ஆரா­வது படங்­கி­ட­மெ­டுக்­கி­றாங்­களோ எண்டு பாத்­தன். ஆனால், அவை முன்­னாலை போய்­நிண்டு முன் வரி­சைக் காற­ரைத்­தான் பட­மெ­டுக்­கி­ற­திலை நண்­டு­விட்­டி­னம். ஆரோ­சி­லர் பழைய பொற்­கா­லத்­தைத் திரும்­பக் கேட்­ட­தை­யா­வது கவ­னிச்­சுப் பெரிய எழுத்­திலை போட்­டாங்­களே அது காணும். இந்த ஏற்­பாட்­டுக்­கா­ரர் செய்த ஏற்­பாட்­டுக் குறை­பாட்­டுக்கு இது­கும் ஓர் உதா­ர­ணம். இல்­லையோ?

முதல்­நாள் போராட்­டத்­துக்­குப் பள்­ளிக்­கூ­டப் பிள்­ளை­யளை அனுப்­பேல்­லை­யெண்டு அதிலை மெயின் றோட்­டி­லை­யி­ருக்­கிற பெரிய பள்­ளிக்­கூ­டத்து அதி­பரை வறுத்த ரீ.வீக் காரற்றை பொறுப்­பு­ணர்ச்­சியை என்­ன­வெண்டு சொல்ல. ‘‘பள்­ளிக்­கூ­டப் பிள்­ளையை ஆற்றை பொறுப்­பிலை, எப்­பிடி இடை­நே­ரம் வெளி­யாலை விடு­கி­றது எண்­டுற விச­யம் தெரி­யாத உங்­க­ளுக்­கேன் சமூக அக்­கறை?’’ எண்டு சீறின சின்­னம்­மாக்­கான்ர கோவத்­திலை நியா­ய­மி­ருக்கோ இல்­லையோ?

அந்­தப் பிள்ளை தான் வதை­பட்­டுச் செத்து எங்­க­ளுக்­குப் பெரிய செய்­தி­யொண்­டைச் சொல்­லி­யி­ருக்கு. நாங்­கள் எங்­கட கிராம, பிர­தேச மட்­டச் செயற்­பா­டு­க­ளுக்­குக்­கூ­டகச் சரி­யான ஒரு கட்­ட­மைப்­பில்­லாம, சமூ­கத் தொடர்­பு­க­ளில்­லாம இருக்­கி­றம். எங்­களை நம்பி, எங்­க­ளுக்­காக, எங்­கட வரிப்­ப­ணத்­திலை ஊதி­யம் பெறு­கி­ற­வை­யா­கட்­டும், எங்­கட வாக்­காலை வாழ்க்கையை அனு­ப­விக்­கி­றவை, அறிக்கை விடு­கி­ற­வை­யா­கட்­டும் அவை எங்­க­ளுக்­கா­ன­தைக் கவனிச்சுச் செய்­ய­வைக்­கிற ஆளு­மை­யான தலை­மைத்­து­வத்­தை­யும் அமைப்­பு­க­ளை­யும் நாங்கள் ஆக்­கி­வைச்­சி­ருக்க வேணும். பிள்­ளை­யின் உயிர் போன­துக்­குப் பிற்­பா­டா­வது அதாலை கிடைச்­சி­ருக்­கிற படிப்­பி­னையை விளங்­கிக் கொள்­ளு­வமா?