சுதந்திர தேவி சிலை மீது மனித உருவம்!.. பதற்றத்தில் பொலிஸார்

அமெரிக்காவின் அடையாள சின்னமாக அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை மீது நேற்று மனித உருவம் ஒன்று ஏறிச்சென்று உட்கார்ந்து கொண்டிருப்பதாக நியூயோர்க் நகர பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால், அப்பகுதிக்கு தீடீர் என்று பொலிஸார் பதற்றத்துடன் குவிந்துள்ளனர்.

இதனையடுத்து,பொலிஸார் சுதந்திர தேவி சிலையை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர். சிலையின் மேலே உள்ள ஒரு பீடத்தில் மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டனர்.

குறித்த நபரை கீழே இறங்குமாறு கேட்டும் அவர் மறுத்துவிட்டார். நான்கு மணி நேர போராட்டத்துக்கு பிறகு குறித்த நபரை கைது செய்தனர்.

குறித்த நபரிடம் நடத்திய விசாரணையில், அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றது தெரிய வந்தமை குறிப்பிடத்தக்கது.