செல்ஃபி மூலம் மரணம் வாக்குமூலம் கொடுத்து ரயில் முன் பாய்ந்த இளைஞர்!

ஆந்திர மாநிலம் குண்டூர் ரயில் நிலையத்தில் செல்ஃபி வீடியோ மூலம் மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணலங்கா கிரமத்தை சேர்ந்த குருவா ரெட்டி குடும்ப தகாராறு காரணமாக மனைவியும் மனைவியின் குடும்பத்தினரும் புகார் அளித்ததன் பேரில் இரண்டு நாட்கள் காவலில் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஏற்பட்டதாகவும், மேலும் மனைவியின் மீது மிகுந்த அன்பு வைத்திருபதாக கூறியுள்ளார்.

செய்யாத தவறுக்காக காவல் இருந்ததை தாங்க முடியவில்லை என்று கூறி முடித்து காணொளியை நிறைவு செய்துள்ளார்.