பெற்ற தாய், தந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட பெண்! இப்படி ஒரு காரணமா?

ஹாங்காங் நாட்டில் தாய், தந்தையைக் கொலை செய்து விட்டு பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 வயதான பங்க் சிங்-யு (Pang Chang-Yu) என்ற பெண் தந்தை மற்றும் தாயை கத்தியால் தாக்கி கொடூரமாகக் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதன்போது, எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில் எக்ஸெமா டோர்மெட் (Eczema Tormet) எனும் அரிப்பு ஏற்படுத்தும் தோல் நோயின் வேதனையால் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் பெண் மரபு வழி தோல் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்ததே அவரை குற்றம் செய்ய தூண்டியிருக்கலாம் என பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

கடந்த தந்தையர் தினத்தன்று நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.