எவ்வித உதவியுமின்றி தண்ணீரில் மிதந்து தவம் செய்யும் நபர்! வீடியோ

சிறுவயதில் நம் எல்லோருக்கும் மாயாஜாலக் கலைகளில் ஒரு தனி ஆர்வம் இருந்ததுண்டு. இது போன்ற வித்தைகளை நாமும் செய்து காட்ட முடியுமா என நம்மில் பலருக்கும் மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்கும்.

அப்படியான அதிசய சக்தியைப் பற்றிய தேடல்களில், யோகிகள் தங்களின் சித்தாற்றலினால் ஆகாயத்தில் பறத்தல், உணவு நீரருந்தமல் நெடுநாட்களுக்கு உயிரோடிருந்தல், தண்ணீரின் மேல் நடத்தல் போன்ற அதிசயங்கள் செய்ததை கேள்விப்பட்டு, அதன் மீது மிகுந்த ஈடுபாடு கொள்கிறோம்.

இவற்றையெல்லாம் ஒரு மனிதனால் செய்ய முடியுமா என கேட்போர்களுக்கு முடியும் என்பதே அந்த யோகிகளின் பதில். அந்த வகையில் நீரில் அமர்ந்த படியே மிதக்கும் ஒருவரின் வீடியோ இதோ.

தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்டது இக்காணொளி. அதில் ஒரு மனிதர் பத்மாசன நிலையில் தண்ணீரின் மீது அமர்ந்திருப்பதை காணமுடிகிறது.

அப்படி நீரில் மூழ்காமல் தியான நிலையில் இருக்கம் அந்நபர் எவ்வித ஊன்றுகோல் அல்லது வேறு ஏதேனும் கருவிகள் உதவியின்றி நீரின் மீது அமர்ந்திருப்பதை நிரூபிக்க அவரின் உதவியாளர், அந்த யோகி அமர்ந்திருக்கும் நீரில் அடியில் சென்று நீந்தியும், கைகளை விட்டு நீட்டி அலசியும் காட்டுகிறார்.

குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.