வீதியோரமாக தரித்து விடப்பட்டிருந்த டிப்பருடன், வேகமாக வந்த மற்றொரு டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் காயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து மீசாலை -ஐயா கடைச் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை நடந்தது.
ஐயா கடைப் பகுதியில் ஏ9 வீதி ஓரமாக நின்ற டிப்பருடன், கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த
டிப்பர் பின்பக்கமாக மோதியதிலேயே விபத்து இடம்பெறுள்ளது.
கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த டிப்பர் தொடருந்துத் தண்டவாளத்திற்கு குறுக்காக மீட்க முடியாதவாறு நின்றுள்ளதுடன்,வீதி ஓரமாக நின்ற டிப்பர் மணலுடன் குடை சாய்ந்துள்ளது.
இதனால் தொடருந்துப் பயணம் சுமார் இரண்டு மணி நேரம் தாமதித்து எனத் தெரிவிக்கப்படுகிறது.