தந்தையின் கொண்­டாட்­டத்­துக்கு வந்த­ மகனுக்கு நடந்த சோகம்!

தந்­தை­யின் பிறந்த நாளைக் கொண்­டா­டு­வ­தற்­காக வந்த இளை­ஞன் மின்­சா­ரம் தாக்கி உயி­ரி­ழந்தார்.

வவு­னியா வாரிக்­குட்­டி­யூர் பகு­தி­யைச் சேர்ந்த க.மிது­சன் (வயது–-22) என்ற இளை­ஞனே மின்­சா­ரம் தாக்கி உயி­ரி­ழந்தார்.

வவு­னியா நக­ரி­லி­ருந்து வாரிக்­குட்­டி­யூ­ருக்கு நேற்று முன்­தி­னம் மாலை 5 மணி­ய­ள­வில் வாக­னத்­தில் சென்­றுள்­ளார்.

வாக­னத்­தைச் சுத்­தம் செய்­வ­தற்­காக, சுத்­தம் செய்­யும் இயந்­தி­ரத்­தின் ஆளியை அழுத்­தி­யுள்­ளார்.

இதன்­போது மின்­சா­ரத் தாக்­கு­த­லுக்­குள்­ளாகி அவர் தூக்கி வீசப்­பட்­டுள்­ள­தாக உற­வி­னர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

அவரை உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லை­யில் சேர்ப்­பித்­த­போ­தும் அவர் உயி­ரி­ழந்து விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.