முதுகெலும்பு இல்லாத தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்: நடிகர் பிரகாஷ்ராஜ்

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், சொந்த மக்கள் போராடியபோது கொன்றதற்கு தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும்.

முதுகெலும்பு இல்லாத அரசு. போராட்டக்காரர்களின் அழுகுரல் அரசுக்கு கேட்கவில்லையா ? மாவட்ட மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் இசைக்கு, நடனமாடிக் கொண்டு இருக்கிறது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.