யாழில். மதுபான நிலையத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பின் பின்னணி!

யாழில். மதுபான நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பத்தலைவர் மாரடைப்புக் காரணமாகே உயிரிழந்தார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த மதுபான நிலையத்தில் வேலை செய்யும் அச்சுவேலி இடைக்காடுப் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான கௌரீசன் (வயது -38) என்பவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது மதுபான சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காணொளிப் பதிவில் குடும்பத்தலைவர் நெஞ்சை இறுகப் பிடித்தவாறு வீழ்வது பதிவாகியுள்ளது.

“குடும்பத்தலைவருக்கு மாரடைப்பு ஏறபட்டுள்ளது தகுந்த முதலுதவி வழங்கப்படாத்தால் அவர் உயிரிழந்துள்ளார்” என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தற்போது அவருடைய சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.