நடுரோட்டில் தந்தை மற்றும் மகன் வெட்டி கொலை!

தமிழ்நாட்டில் முன் விரோதம் காரணமாக தந்தை மற்றும் மகன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (47).

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோவில் திருவிழா நடந்தது.

அப்போது முருகேசன் தரப்பினரும், சக்திவேல் தரப்பினரும் மோதி கொண்ட நிலையில் முருகேசனும் அவர் மகன் அர்ஜுனும் நடுரோட்டில் வெட்டி கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் பொலிசில் சரணடைந்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மலர் செல்வன் (45), அருண்குமார் (22) ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்தார்கள்.