பெண்ணொவருடன் விடுதிக்கு சென்ற நபருக்கு நேர்ந்த கதி!

மாத்தறை – வல்கம பிரதேசத்தின் விடுதி அறையொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று இரவு பெண்ணொருவருடன் வந்து குறித்த அறையில் தங்கியிருந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் , இன்று காலை விடுதி உரிமையாளர் குறித்த அறை கதவை தட்டியுள்ள போதும் , எவ்வித பதிலும் கிடைக்காததால் கதவை திறந்து அறையினுள் சென்றுள்ளார்.

இதன்போது , குறித்த நபர் உயிரிழந்த கிடப்பதை விடுதி உரிமையாளர் கண்டு , காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் , அவருடன் வந்த பெண் குறித்த சந்தர்ப்பத்தில் அறையில் இருக்கவில்லை என உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சடலம் அவரின் மனைவியால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

48 வயதுடைய மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் மாத்தறை பொது மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த நபர் உட்கொண்ட ஔடதம் ஒன்று காரணமாக இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.