வெள்­ளிக்கு முன்னர் தேசிய அரசின் ஒப்­பந்தம் கைச்­சாத்து: 8 ஆம் திகதி பாரா­ளு­மன்ற அமர்வு!!

ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இடை­யி­லான தேசிய அர­சாங்க ஒப்­பந்தம் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முன்னர் கைச்­சாத்­தி­டப்­பட உள்­ள­தாக அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

இரு தரப்பு ஒப்­பந்­தத்தை மீள்­கைச்­சாத்­திட்டு தேசிய அர­சாங்­கத்தை தொடர்­வ­தற்­கான இணக்கப்பாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விற்கு இடையில் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்டமைக்கு அமை­வா­கவே குறித்த ஒப்­பந்தம் இவ்வாரத்தில் கைச்­சாத்­தி­டப்­பட உள்­ளது என்றும் அவர் கூறினார்.

இத­ன­டிப்­ப­டையில் புதிய அமைச்­சுக்­க­ளுக்­கான அமைச்சர் தெரி­வுகள் மிகவும் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றன.

7 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை புதிய அமைச்­ச­ரவை பத­விப்­பி­ர­மாணம் செய்­யப்­பட உள்­ளது. மறுநாள் 8 ஆம் திகதி கூட உள்ள 8 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் 2ஆவது கூட்­டத்­தொ­டரில் ஜனா­தி­பதி விசேட உரை­யினை நிகழ்த்த உள்ளார்.

இதன் போது அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­கான அர­சாங்­கத்தின் பொரு­ளா­தாரக் கொள்கை குறித்து ஜனா­தி­பதி உரை­யாற்ற உள்ளார். எவ்வா­றா­யினும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும், சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் கடந்த 2015ஆம் ஆண்டில் செய்­து­கொள்­ளப்­பட்ட தேசிய அரசாங்­கத்தின் ஒப்­பந்தம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யா­னது.

நீண்ட அர­சியல் நெருக்­க­டிக்கு பின்னர் இந்த ஒப்­பந்­தத்தை தொடர்­வது குறித்து இரு­த­ரப்­பிலும் எவ்­வி­த­மான கருத்­துக்­களும் தெரி­விக்­கப்­பட வில்லை.

இந்­நி­லையில் பல்­வேறு அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் தேசிய அர­சாங்­கத்தை 2020ஆம் ஆண்­டு­வரை தெடர்­வது குறித்து இணக்கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ளன.

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே புதிய அமைச்­ச­ரவை குறித்த பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இந்த பணிகள் இறு­திக்­கட்­டத்தை அடைந்துள்ள­தாக அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்தர் ஒருவர் குறிப்­பிட்டார்.

ரவி கரு­ணா­நா­யக்க , விஜே­தாச ராஜ­பக்ஷ ஆகி­யோ­ருக்கும் அமைச்சு பத­விகள் வழங்­கு­வது குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. நிதி மற்றும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த ரவி கரு­ணா­நா­யக்க மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­கா­ரத்­தினால் பதவி விலகினார்.

அதே போன்று அமைச்­ச­ரவைக் கூட்டுப் பொறுப்பை மீறிய குற்­றச்­சாட்டை அடுத்தும் விஜே­தாச ராஜ­பக்ஷ பதவி வில­கினார்.

இந்­நி­லையில் இவர்கள் இரு­வ­ரையும் மீண்டும் அமைச்­ச­ர­வைக்கு உள்­வாங்­கு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

அத்துடன் திலக் மாரப்பன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம ஆகியோர் தொடர்ந்தும் அதே அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கு அமைச்சு கைமாறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.