பசில், நாமலுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

இலங்கையில் இன்று பௌத்த மக்கள் வெசான் நோன்மதி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நாடே திருவிழா கோலம் பூண்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளனர்.

பௌத்தர்களுக்கான சிறப்பான நாளான இன்றும் விசாரணை பிரிவில் ஆஜராக வேண்டிய நெருக்கடியான நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் பசில் மற்றும் நாமல் இன்றைய தினம் ஆஜராகியுள்ளனர்.

அதற்கமைய ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்று கிழமை நாமல் மற்றும் பசில் பொலிஸ் நிதி மோசடி குற்ற விசாரணை பிரிவிற்கு சென்று அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.