நடிகர் சிவக்குமாரின் மகளும், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையுமான திருமதி பிருந்தா பின்னணி பாடகியாக திரைதுறையில் அறிமுகமாகியிருக்கிறார்.
கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் “மிஸ்டர் சந்திரமௌலி”, திரு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு “விக்ரம் வேதா” புகழ் சாம் சி .எஸ் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கத்தில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், திருமதி பிருந்தா அவர்கள் கடவுள் வாழ்த்து பாடுவார் என்று அறிவித்தார்.
அவர் யார் என்று அதுவரை ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது. பிறகு நடிகர் சூர்யா அறிமுகப்படுத்தும் போது தான் தெரியவந்தது.
தங்கையின் பால்ய வயது கனவை நனவாக்கியதற்காக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர் சாம் சி எஸ், இயக்குநர் திரு உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது நடிகர் சிவக்குமார் அனுப்பிய வாழ்த்து செய்தியை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வாசித்து காட்டி பிருந்தாவை வாழ்த்தினார். இந்த படத்தில் பிருந்தா ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டது. இதை கேட்ட ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.