சுற்றுலாப்பயணி செய்த அருவருப்பான செயல்: பெருந்தொகை அபராதம் விதித்த நிர்வாகம்

இத்தாலியின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான புளோரன்ஸ் தெருவில் சிறுநீர் கழித்த சுற்றுலாப்பயணிக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நகரமான புளோரன்ஸ் தெருவில் சிறுநீர் கழித்த டென்மார்க் நாட்டு இளைஞருக்கு 8,750 பவுண்ட்ஸ் அபராதம் விதித்து நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

18 வயதான அந்த இளைஞர் பாடசாலையில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாவுக்கு இத்தாலி சென்றுள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் வரலாற்று சிறப்பு மிக்க Piazza della Signoria அருகே சிறுநீர் கழித்துள்ளார்.

இதேபோன்று துனிசிய நாட்டவர் ஒருவருக்கும் 10,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராத தொகையானது மிக அதிகம் என தெரியும் என்றாலும், ஏற்கெனவே அமுலில் இருந்து வரும் சட்டமே இதுவென நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.