பாலத்தை பார்வையிட சென்ற வெளிநாட்டவர்களுக்கு நடந்த பரிதாபம்!

தெமோதரவில் அமைந்துள்ள ஒன்பது வளைவுகளை கொண்ட பாலத்தை பார்வையிட வந்த நான்கு வெளிநாட்டவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதுடன், இந்த சம்பத்தில் பாடசாலை மாணவர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பண்டாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலத்தில் மீது பயணித்த தொடரூந்தில் இருந்து சிலர் கூச்சலிட்டதில் குளவி கூடு கலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.