தப்பு செய்பவர்கள் தப்பை நிறுத்தவும்: எச்சரிக்கை பாதாதைகள்!

தப்பு செய்பவர்கள் அனைவரும் தப்பை நிறுத்தவும் எனும் தொனிப்பொருளிலில் வவுனியா கணேசபுரம் பிரதான வீதி சந்தியில் இன்று பாதாதை ஒட்டப்பட்டுள்ளது.

தப்பு செய்பவர்கள் அனைவரும் தப்பை நிறுத்தவும், இதை மீறி தப்பு செய்பவர்கள் எம்மிடம் தாங்க இயலாத தண்டனை அனுபவிப்பீர்கள் என எழுதப்பட்டு வீஸ்மர்கள் என பொறுப்புக் கூறப்பட்ட பாதாதையே அவ்விடத்தில் காணப்பட்டது.

இவ்விடயம் கணேசபுரம் மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.