திருமணம் முடிந்த சில மணித்தியாலத்தில் மரணித்த மணமகள்… சோகத்தில் குடும்பம்

ஐதராபாத் சூர்யாபேட் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜி.வேணு என்பவருக்கும் ஐதராபாத்தில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். இவர்களுடன், குடும்பத்தினர் சிலரும் சென்று இருந்தனர். மணமக்கள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பினர்.

அப்போது கோவிலுக்கு வெளியே வந்த மணப்பெண் காயத்ரி திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதட்டம் அடைந்த குடும்பத்தினர் அவரை அருகில் இருந்த மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திருமணத்தின் போது அதிக சத்தத்துடன் கூடிய இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் திருமணத்துக்கு முன்பு மணமகள் காயத்ரி உணவு உண்ணாமல் நோன்பு இருந்தார். திருமணம் முடிந்ததும் அவசர அவசரமாக உணவு சாப்பிட்டதாலும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.