சிங்கப்பூரில் உணவகத்தில் பட்டு புடவையுடன் ஜொலிக்கும் ஸ்ரீதேவி!

சிங்கப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் ஸ்ரீதேவி உருவத்தில் பொம்மை செய்து அதற்கு பட்டு புடவை நகைகள் அணிவித்து வைத்து இருக்கிறார்கள்.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24-ஆம் திகதி உயிரிழந்த நிலையில் அவருக்கு அஞ்சலில் செலுத்தும் நிகழ்வு பல்வேறு இடங்களில் இன்னும் நடந்து வருகிறது.

சென்னையில் கூட பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் சிங்கப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் ஸ்ரீதேவி உருவத்தில் பொம்மை செய்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த பொம்மைக்கு பட்டு புடவை நகைகள் அணிவிக்கப்பட்டுள்ளது.