டிப்பருடன் கார் மோதி விபத்து!! தாயும் மகளும் பலி!!

காலி – அஹங்கம வெல்ஹேங்கொட பகுதியில் கோர விபத்தில் சிக்கி தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்னர்.குறித்த விபத்து இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இதில் டிப்பர் ரக வாகனமும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த தாயும் மகளும் உயிரிழந்துள்னர்.மேலும், குழந்தை ஒன்றும் நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.