செல்போனில் பேசிய இளைஞர்: உயிரிழந்த பரிதாபம்!

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், இளைஞர் ஒருவர் ஒன்பதாவது மாடியில் போனில் பேசிக்கொண்டிருந்த போது, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெள்ளந்தூரில், கௌதம்(28) எனும் மென்பொருள் பொறியாளர் தனது நண்பர்களுடன் ஹோலி கொண்டாடி உள்ளார்.

இந்நிலையில், இரவு 11 மணியளவில் கௌதமின் பெற்றோர் அவரை போனில் அழைத்துள்ளனர். அவர்களுடன் பேசுவதற்காக பால்கனிக்கு சென்ற அவர், சுவரில் சாய்ந்த போது தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

ஒன்பதாவது மாடியில் இருந்து விழுந்ததால், தலையில் பலத்த காயமடைந்த கௌதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், கௌதமின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், கௌதமின் சகோதரி அளித்த புகாரின் பேரில், கௌதமின் மரணம் எதிர்பாராத விபத்தா அல்லது கொலையா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.