என் உயிரை காப்பாத்துங்க: நடுரோட்டில் துடிதுடித்த நபர்!

சீனாவில் ரயிலில் பயணம் செய்ய வந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மக்களின் உதவியை பெற பணத்தை வீசிய சம்பவம் நடந்துள்ளது.

சீனாவில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ரயில் நிலையம் வந்துள்ளார். அவர், பல மாதங்களுக்கு முன்பு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரால் தனது பையில் இருந்து மாத்திரையை எடுக்க முடியவில்லை. மேலும், உதவிக்கு எவரையும் அழைக்க முடியாத நிலையில் அவர் இருந்துள்ளார்.

இதனிடையே, மக்கள் பரபரப்பாக ரயில் நிலையத்தில் வந்து சென்று கொண்டிருந்தனர். இதனால் ஒருவரும் அந்த நபரை கவனிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, மக்களின் கவனித்தை தன் பக்கம் திருப்ப, குறித்த நபர் தான் வைத்திருந்த பணத்தை கட்டுக்கட்டாக வீசியுள்ளார்.

அதனைக் கண்ட மக்கள், உடனடியாக குறித்த நபரின் நிலையை அறிந்து கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.