மஹிந்த அணியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றத் தயாராகும் சுதந்திரக் கட்சி!!

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பொதுஜன பெரமுன கட்சியுடனும் கூட்டுச் சேரத் தயாராக இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் சுமார் 167 உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது.

அவ்வாறான உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்ற ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமன்றி பொதுஜன பெரமுன கட்சியுடனும் கூட்டுச் சேர எமது கட்சி தயாராக உள்ளது. ஆனால் நாங்கள் தான் அதிகாரத்தைக் கொண்டிருப்போம்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிகாரத்தின் கீழ் வரும் உள்ளூராட்சி சபைகளில் பயனுறு சேவைகளையும் அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்கொள்ள நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.