மொபைலில் பாட்டுக் கேட்ட யுவதிக்கு நடந்த கதி!!

கைய­டக்கத் தொலை­பேசி மின்­னேற்­றப்­பட்டுக் கொண் ­டி­ருக்க அதில் இணைக்­கப்­பட்ட ஹெட்போன் (தலையில் அணி­யப்­படும் ஒலி­வாங்கி உப­க­ரணம்) மூலம் பாடலை செவி­ம­டுத்துக் கொண்­டி­ருந்த 17 வயது யுவ­தி­யொ­ருவர், ஹெட்போன் காதுப் பகு­தியில் உருகி மின்­சாரம் கசிந்­ததால் மின்­சா­ரத்தால் தாக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது.கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று புதன்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

றியசோ பிறியோ நகரைச் சேர்ந்த லூஸியா படின்­ஹெரோ என்ற யுவ­தியே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.கைய­டக்­கத்­தொ­லை­பேசி தொடர்ந்து மின்­னேற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்க அந்தத் தொலை­பே­சியும் ஹெட்­போனின் காதில் இணைக்­கப்­படும் பகு­தியும் உரு­கிய நிலையில் யுவதி உணர்­வி­ழந்து காணப்­பட்­ட­தாக அவ­ரது பாட்டி கூறினார்.இத­னை­ய­டுத்து அந்த யுவ­தியை உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்ற போதும் அவ­ரது உயிரைக் காப்­பாற்ற முடி­ய­வில்லை எனவும் அவர் தெரி­வித்தார்.

மேற்­படி யுவதி மின்­சா­ரத்தால் தாக்­குண்ட போது இடி மின்­ன­லுடன் கூடிய கால­நிலை எதுவும் நிலவவில்லை எனவும் அவரது மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.