தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ‘T-20’ போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘T-20’ தொடரில் பங்கேற்கிறது.இரண்டாவது போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற தென் ஆப்ரிக்க அணி தலைவர் டுமினி களத்தடுப்பு தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ரெய்னா 31 ஓட்டங்கள் எடுத்தார். அதன்பின்னர் மணிஷ் பாண்டே, தோனி சிறப்பாக விளையாடி இருவரும் அரை சதம் விளாசி, இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது. மணிஷ் பாண்டே (79), தோனி (52) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.பதிலுக்கு களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்மட்ஸ் (2) ஒற்றை இலக்கில் திரும்பினார். ஷர்துல் பந்தில் ஹென்ரிக்ஸ் (26) ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அசத்திய விக்கெட் காப்பாளர் கிளாசன் 7 சிக்சர்கள் அடங்கலாக (69) அரை சதம் விளாசினார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த டுமினி, உனத்கட் பந்துவீச்சில் இவர் தொடர்ந்து இரண்டு சிக்சர் அடித்து, வெற்றியை உறுதி செய்தார். தென் ஆப்ரிக்க அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. டுமினி (64), பெகார்டியன் (16) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம், தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 24ம் திகதி கேப்டவுனில் இடம்பெறவுள்ளது.