கோவை மாவட்டம், காரமடை அருகே, பில்லூர் டேம் உள்ளது. இந்நிலையில், காரமடையில் இருந்து, பில்லூருக்கு நேற்று அரசுப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியே காட்டு யானை ஒன்று வந்துள்ளது.
பேருந்தில் இருக்கும் மக்கள் அதிர்ச்சியடைந்து பஸ் எடுக்கதீங்க என்று சொல்லி, யானையை பார்த்து கொங்கு பாசையில், “போய்டு ராஜா, வழிவிடு ராஜா பஸ்ல குழந்தைங்க எல்லாம் இருக்காங்க” என்று சொல்ல,
அவர்களின் பேச்சை கேட்ட யானை தலையை அசைத்து கொண்டு அந்த இடத்தை விட்டு பின்னே சென்றது. சமத்து குட்டியாய் காட்டுக்குள் சென்ற யானையை பார்த்த மக்கள் போங்க போங்க என்று பஸ்சை எடுத்தனர்.