குடிப்பழக்கம், சிறிது சிறிதாக செய்யப்படும் தற்கொலை முயற்சியே!
உடல் நலத்தைப் பலவிதங்களில் கெடுத்து, வாழ்க்கை நெறிமுறைகளையும் சிதைத்து, அவரின் மனநலத்தையும் வெகுவாக பாதிக்கிறது. அவரின் போக்கால் மனைவி மக்களும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாவதுடன் அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிறது.
இப்படியிருக்கையில், கேரளாவில் ஒருவர் ஒரு பாட்டில் சாராயத்திற்காக தனது மகளை வாடகைக்கு விட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இந்த நிலையில் அவர் தனது மைனர் மகளை 24 வயது இளைஞர் ஒருவரிடம் இரவு முழுவதும் ரூ.300க்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தந்தையையும் மைனர் சிறுமியை வாடகைக்கு எடுத்த இளைஞரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து இரண்டு நபர்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒரே ஒரு பாட்டில் சாராயத்திற்காக தனது, அழகான மகளை வாடகைக்கு விட்டுள்ள தந்தையின் இச்செயலை கண்டித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
மேலும், இதுபோன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேரள அரசை பெண்கள் அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.