வைரமுத்து குடும்பத்தையே தகாத வார்த்தைகளால் விமர்சிக்கும் இளம்பென்! வீடியோ

ஆண்டாள் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக கவிஞர் வைரமுத்துவை விமர்சித்து நித்யானந்தா சிஷ்யை ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் ஆண்டாளை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பத்திரிக்கை ஒன்றில் எழுதியிருந்த வைரமுத்துவை கண்டித்து பலரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

இதனால் வைரமுத்துவின் மீது பலரும் வழக்கும் பதிவு செய்து வருகின்றனர்.

நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவர், கவிஞர் வைரமுத்துவை மிகக் கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆன்மீகத்தில் ஈடுபட்டு சொற்பொழிவு நடத்தி வரும், ஒரு இளம்பெண் இவ்வாறு தாகாத வார்த்தைகளை உச்சரித்து கடுமையான முறையில் ஒருவரை விமர்சிப்பது என்பது ஏற்றக்கூடியதாக இல்லை.

அதாவது, கவிஞர் வைரமுத்து ஆண்டாளைப் பற்றி தவறாக பேசியது என்பது ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டி கூறியதே ஆகும்.

அது, அவருடைய கருத்தும் இல்லை, அதற்கு அவர் மண்ணிப்பும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறு, இருக்கையில் அவரை தாக்கி பலர் வீடியோ வெளியிடுவதில் ஏதும் பின்னனி இருக்கிறதோ என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.