பெண்ணை கொன்று கான்கிரீட் பீப்பாயில் புதைப்பு!

201801090959382379_woman-murdered-dead-body-buriel-concrete-barrel-police_SECVPFகேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கும்பளம் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது தோட்டத்தையொட்டி உள்ள வயலில் நீண்ட நாட்களுக்கு பிறகு விவசாய பணிகளை தொடங்க திட்டமிட்டார்.

இதையொட்டி விவசாய தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு வயல் பகுதியில் புதர்போல வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி அகற்றும் பணி நடந்தது. அப்போது அங்கு ஒரு பெரிய பிளாஸ்டிக் பீப்பாய் கிடந்தது. அந்த பீப்பாய்க்குள் கான்கிரீட் கலவையும் நிரப்பப்பட்டு இருந்தது.

இதைதொடர்ந்து அந்த கான்கிரீட் கலவையை கடப்பாறை மூலம் உடைத்து பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதன் உள்ளே ஒரு எலும்புக்கூடு இருந்தது. உடனே இதுபற்றி கும்பளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் அங்கு சென்று கான்கிரீட்டை முழுமையாக உடைத்து பார்த்தனர். அப்போது அது ஒரு பெண்ணின் எலும்புக்கூடு என்பது தெரியவந்தது. மேலும் ஒரு கொலுசு மற்றும் பெண்ணின் ஆடையும் சிதைந்த நிலையில் இருந்தது. சில பழைய 500 ரூபாய் நோட்டுகளும் அதில் இருந்து கண்டு எடுக்கப்பட்டது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த பெண்ணை யாரோ கற்பழித்து கொலை செய்து பிணத்தை கான்கிரீட் நிரப்பிய பீப்பாயில் போட்டு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பெண் யார்? என்பதை கண்டு பிடிப்பதற்காக மாயமான பெண்கள் பற்றிய புகார் பட்டியலை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.