மர்ம நபர்­களால் திருமலையில் கடத்தப்பட்டவர் மிரிஸ்வத்தையில் மீட்பு!!

திரு­கோ­ண­ம­லையில், காலஞ்­சென்ற பிர­பல வர்த்­தகர் ஒரு­வரின் மகன் மர்ம நபர்­களால் கடத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், நேற்று மாலை அவர் கம்­பஹா, யக்­கல – மிரிஸ்­வத்தை பகு­தியில் வைத்து பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்ளார்.

vitகொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் அவர் இவ்­வாறு நேற்று மாலை மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், கடத்தல் முறைப்­பாடு தொடர்பில் திரு­மலை பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதால் அவரை திரு­கோ­ண­ம­லைக்கு நேற்று இர­வோ­டி­ர­வாக அழைத்துச் சென்று ஒப்­ப­டைத்­த­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை திரு­மலை பொலிஸார் முன்­னெ­டுப்பர் எனவும் கடத்தல் உள்­ளிட்ட அனைத்து விட­யங்­களும் அவர்­க­ளது விசா­ர­ணை­க­ளி­லேயே தெரியவரும் எனவும் பொலிஸ் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார்.

திரு­மலை, நான்காம் மைல் கல் பகு­தியைச் சேர்ந்த  23 வய­தான வாலிபர், கடந்த 5 ஆம் திகதி மாலை  தனது காத­லியைச் சந்­தித்­து­விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போதே கடத்திச் செல்­லப்­பட்­ட­தாக கூறப்­பட்­டது. குறித்த இளை­ஞரின் தந்தை, திரு­ம­லையில் பிர­பல வர்த்­த­க­ராவார். சில வரு­டங்­க­ளுக்கு முன் அவர் சுட்டுக் கொல்­லப்­பட்­டி­ருந்தார். இளை­ஞரின் தாய்க்கு  கடந்த ஐந்தாம் திகதி இரவு கிடைத்த தொலை­பேசி அழைப்பில், இளை­ஞரின் தந்தை பற்­றிய சில விப­ரங்­களைக் கேட்டுத் தெரிந்­து­கொள்­வ­தற்­கா­கவே இளை­ஞரைக் கடத்­தி­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தக் கடத்தல் விவ­காரம் குறித்து பொலி­ஸா­ருக்குத் தெரி­விக்கக் கூடாது என்றும் தொலை­பேசி அழைப்பில் கூறப்­பட்­டுள்­ளது. எனினும் இளை­ஞரின் தாய் திரு­கோ­ண­மலை பொலிஸில் தமது மகன் கடத்­தப்­பட்­டமை குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையிலேயே பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். இந் நிலையிலேயே அவர் மிரிஸ்வத்தை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.