உணவுப் பொதியின் விலை இலங்கையில் அதிகரிப்பு!!

உணவு பொதியிட பயன்படுத்தப்படும் 20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தீன் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உணவு பொருட்களை பொதியிட பயன்படுத்தப்படும் பொலித்தீனின் (லஞ்சீட்) விலை அதிகரித்துள்ளதால் உணவு பொதிகளின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒரு உணவுப் பொதியினை 10 ரூபாவால் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

food