தீவிர குளிரினால் மரணமடைந்த தம்பதியர்!

ஒன்ராறியோ-அதி தீவிர குளிரினால் வயோதிப தம்பதியர் மரணமடைந்த துயர சம்பவம் Huron County யில் நடந்துள்ளது என ஒன்ராறியோ மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

புளுவாட்டர் ஒன்ராறியோ பகுதியில் இருந்து புதன்கிழமை காலை 9மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலை தொடரந்து அங்கு சென்ற பொலிசார் வீட்டின் வெளியே இருவரது உடல்களை கண்டு பிடித்துள்ளனர்.

83-வயதுடைய அடா ரெயிப்நெர் மற்றும் 90-வயதுடைய கிரான்ட் ரெயிப்நெர் இருவரும் இறந்து விட்டதாக Huron County மருத்துவ உதவியாளர்கள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணத்தை பொலிசார் வியாழக்கிழமை வெளியிட்டனர்.

90-வயதுடைய மனிதரின் மரணத்திற்கு மருத்துவம் தொடர்பான சம்பவம் காரணம் எனவும் இவர் தம்பதியினரின் பகுதிக்குள் உள்ள ஒரு திறந்த கொட்டகைக்குள் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார். இவரது மரணம் மாரடைப்பினால் ஏற்பட்டதென தெரிவிக்கப்பட்டது.

தனது கணவரை தேடிச்சென்ற 83-வயதுடைய பெண்மணி அதிதீவிர குளிர் வெப்பநிலையால் வெளிப்புறத்தில் இறந்து விட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.

மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

625.0.560.380.280.600.660.800.668.160.90 (1)

625.0.560.380.280.600.660.800.668.160.90