ஆற்றில் கவிழ்ந்த பேருந்து: 20 பேர் பலி, 10 பேர் படுகாயம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் 40 பேருடன் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறி ஆற்றினுள் விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

bus-fell-down-from-bridge-to-river-kills-27-people-in-rajasthan-23-1514006807ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டம் துபி பகுதியில், சவாய் மாதோபூரில் இருந்து லால்கோட் வரை செல்லும் பேருந்து ஆற்றின் மேல் பாலத்தை கடந்துள்ளது. அப்பொழுது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றினுள் விழுந்தது. இதில் பயணம் செய்த 40 பயணிகள் நீருக்குள் மூழ்கினர்.

இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் அனைவரையும் மீட்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் படுகாயமடைந்த 10 பெற மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.