உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காகத் தனியான அலுவலகம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

1458306475-7236_0இந்நிலையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மாவட்ட செயலக மட்டத்திலும் இவ்வாறான அலுவலகங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இரண்டு கட்டத்தில் இடம்பெற்ற போதும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒரே தினத்திலேயே இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.