தடுப்பூசியால், உயிருக்கு ஆபத்து !

பிலிப்பைன்ஸ் நாட்டில்,  டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் போடப்பட்ட  தடுப்பூசியால், உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில்  தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

_66817906_002720584-1இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்ட சுமார் 7 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து, தடுப்பூசி போடும் திட்டம் உடனடியாக கைவிடப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்தத் தடுப்பூசியால் நோய் பாதிக்காத குழந்தைகளும் பெரியவர்களும் வெகுவாக பாதிக்கப்பட‌க் கூடும் என சனோஃபி என்ற  பிரான்ஸ் நாட்டு  மருந்து நிறுவனம்,  கடந்த வாரம்  எச்சரித்தது.

இதுவரையில், சுமார் 7 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த மருந்து பாதுகாப்பானதா என ஆய்வு செய்யாமல் அந்த மருந்துக்கு அனுமதி அளித்தது ஏன்? என்று பிலிப்பைன்ஸ் நீதிமன்றம்  சுகாதார அமைச்சிடம்  கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு, ஆதாரங்கள் கிடைத்தால்,  சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு நோய்க்கு எதிராக போடப்படும் தடுப்பூசியை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும், இந்த தடுப்பூசியை இலங்கையில் அறிமுகம் செய்வதற்கான கோரிக்கைகள் வந்தபோதும் அதனை சுகாதார அமைச்சு நிராகரித்ததாகவும்  சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டி பிரிவின் விஷேட வைத்தியர் ப்ரசீலா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.