வெறும் கடலை மாவை வைத்து முகத்தின் அழகை அதிகரிப்பது எப்படி.!

வெறும் கடலை மாவை வைத்து முகத்தின் அழகை அதிகரிப்பது எப்படி.!

முகத்தை வெள்ளையாக்க அனைவர்க்கும் ஆசை இருக்கும். அந்த வகையில் பெண்கள் பல குறிப்புகளை பயன்படுத்துவது வழக்கம். எனவே அவ்வாறு முகத்தை இயற்கை பொருட்கள் வைத்து அழகாக்க இந்த குறிப்புகளை பயன்படுத்தலாம். தினமும் கடலை மாவு தேய்த்து குளிப்பதன் மூலமும், கடலை மாவை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவுவதன் மூலமும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெறும் கடலை மாவை வைத்து முகத்தின் அழகை அதிகரிப்பது எப்படி.!

மேலும், சிறிது பாதாமை காலையில் நீரில் ஊற வைத்து, இரவில் அதன் தோலை நீக்கிவிட்டு, 2 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.