உத்திரபிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரு ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரபிரதேசத்தில் அலகாபாத் நகரிலிருந்து டெல்லிக்கு மகத் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அங்கு s8 பெட்டியில் ஓய்வு பெற்ற நீதிபதியின் மகள் ஒருவர் பயணம் செய்துள்ளார். இரவு நேரத்தில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம், அதே பெட்டியில் பயணம் செய்த பாட்னாவை சேர்ந்த அமித்குமார் ராய் மற்றும் பிகாரை சேர்ந்த தபேஷ் குமார் என்ற இரு ராணுவ வீரர்களும், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதனால் பயந்து போன அந்த பெண் கூச்சலிடவே அருகில் உறங்கிக்கொண்டிருந்த சக பயணிகள் விழித்துக்கொண்டு அந்த பெண்ணை ராணுவ வீரர்களிடம் இருந்து காப்பாற்றினார்.
இதனையடுத்து எட்வா ரெயில்வே காவல் நிலையத்தில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரு ராணுவ வீரர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.