பிரபல நடிகை தீபிகா படுகோனே நடித்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் தான் பத்மாவதி. இந்த படத்தில் ராணி பத்மாவதியை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என்று ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் கடும் போராட்டம் நடித்தி வருகிறார்கள். இந்த படத்தை திரையிட்டால் பல பிரச்சனைகள் கிளம்பும் என்றும் நடிகை தீபிகா படுகோனேவிற்கு கொலை மிரட்டலும் கொடுத்து வருகிறார்கள். டிசம்பர் 1 ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்த பத்மாவதி படம் தள்ளிவைக்கப்பட்டது. படத்தை எப்போது ரிலீஸ் செய்ய உள்ளனர் என்ற புதிய தேதியும் இதுவரை வெளியிடப்படவில்லை. தணிக்கை குழுவும் சான்றிதழ் கொடுக்க தவிர்த்துவிட்டது.
இந்நிலையில், இந்த படத்தை ஜனவரி 26 ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பத்மாவதி படக்குழு வட்டாரங்கள் கூறுகையில், இரு மாநில தேர்தல் முடியும் வரை நாங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க போவதில்லை. ஒருவேளை, படத்தின் ரிலீஸ் பற்றி நீங்கள் உடனடியாக தெரிந்து கொள்ள விரும்பினால், ஜனவரிக்கு முன் நாங்கள் அறிவித்து விடுவோம். மேலும், இந்த பிரச்சனைகளும் படத்தின் தணிக்கை சான்றிதழும் கிடைக்க ஜனவரி மாதம் ஆகிவிடும், எனவே ஜனவரியில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.