ஜெயலலிதா சமாதியில் கூடிய முதல்வர், துணை முதல்வர்!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவினுக்கு பிறகு இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த சசிகலா மற்றும் எடப்பாடி – ஓபிஎஸ் அணியினர் தாங்களே உண்மையான அதிமுகவினர் எனவும் இரட்டை இலை சின்னமானது தங்களுக்கே உரியது எனக்கோரி தேர்தல் ஆணயத்தினை நாடியிருந்தனர். தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், இன்று அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் அணியினருக்கே உரியது என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

dc-Cover-o7nol0m85ekgurjs2ussr4vgd2-20170215024512.Medi

 

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மலர் தூவி மரியாதை செல்லுத்தினார்கள். இதை தொடர்ந்து எம்ஜிஆர், அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செல்லுத்தினார்கள்.