பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக் – அமெரிக்காவில் நடந்த சுவாரசியம்

பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக் - அமெரிக்காவில் நடந்த சுவாரசியம்

நியூயார்க்:

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பேஸ்புக் நேரலை மூலம் பலருடன் இணைந்து பிராத்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்தார். இதனை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அருகில் இருந்த மகனிடம் கூறினர். ஆனால் சிறுவனுக்கு கண் தெரியாததால் உதவி செய்ய முடியவில்லை. இதனை கண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அப்பெண்ணின் மகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவருடைய மகள் மயக்கம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று காப்பாற்றினர்.

இரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பேஸ்புக் மூலம் தனது உயிர் காப்பாற்றப்பட்டதற்கு அந்த பெண் நன்றி கூறியுள்ளார். தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.