பியர் விலை குறைப்புக்கு எதிராக எமது ஆட்சேபனையை முன்வைப்போம்!

இலங்கையில் பியர் வகை மதுபானத்திற்கான வரி குறைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிரான ஆட்சேபனை ஒன்று யாழ் மாவட்டத்திலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.

5a0c7fde3a026-IBCTAMIL

அதன்படி, இன்று (15.11.2017) யாழ் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் கலந்துரையாடலின் போது பியர் விலை குறைப்புக்கு எதிராக எமது ஆட்சேபனையை அரசுக்கு தெரிவிப்பதென முடிவு செய்யப்பட்டதாக சிவில் சமூக அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய சகல சிவில் அமைப்புக்களும் இணைந்து, எதிர்வரும் 17.11.2017 வெள்ளியன்று காலை 9.00 மணிக்கு மகஜரொன்றை, வடபகுதி ஆளுனரிடமும், மாவட்ட அரச அதிபரிடமும் கையளிப்பதென முடிவு செய்யப்பட்டது.

இதில் சகல அமைப்புக்களும் கலந்து கொள்ளுமாறு யாழ் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளனச் செயலாளர் திரு.ச.செந்துராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்ககையில், ஏற்கனவே மது பாவனையில் முன்னணிவகிக்கும் யாழ் மாவட்ட சமூகத்தை இவ் விலை குறைப்பு மேலும் சீரழிந்துவிடும் என்று அச்சமுறுவதாகவும் தெரிவித்தார்.