சுனாமியால் பலியான ஆதிகால மனிதரின் மண்டையோடு! விஞ்ஞானிகளின் விளக்கம்!!

பப்புவா நியு கினியில் பழங்கால மனிதனின் மண்டையோடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறியப்பட்டதிலேயே சுனாமியால் பலியான மிகப்பழமையான நபரின் மண்டையோடாக இருக்கலாம் என்று இதுகுறித்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

59f22593c7a10-IBCTAMILஇந்த மண்டையோடு 1929 ஆம் ஆண்டு ஐடேப் என்ற நகர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைய மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படும் ஹோமோ எரக்டஸ் இனத்தின் சான்றுகளை இது கொண்டுள்ளது. இருப்பினும், ஐடேப் நகரம் முன்பு ஒரு கடற்கரை பகுதியாக இருந்ததாகவும், சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன் சுனாமியால் தாக்கப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மண்டையோடு கிடைத்த பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட வண்டல் மண்ணையும், அந்த பகுதிக்கு அருகே 1998-ஆம் ஆண்டு சுனாமியால் சின்னாபின்னமான பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்ணையும் கொண்டு சர்வதேச குழு ஒப்பிட்டு பார்த்ததையடுத்து, இந்த மண்டையோடு சுனாமியால் பலியான நபர் ஒருவரின் மண்டையோடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவர்தான் ஆதிகால சுனாமியால் பலியான முதல் நபரா? விஞ்ஞானிகள் ஆய்வு

நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் கோஃப் அவர்களின் கருத்துப்படி,

இந்த உலகின் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுனாமியை எதிர்கொண்டு வந்துள்ளார்கள் இந்த என்பது வண்டல் மண்ணிலிருந்து கிடைத்த புவியியல் ஒற்றுமைகள் காட்டியுள்ளன என்றார்.

இதேவேளை ”நீண்ட நாட்களுக்குமுன் பலியான இந்த மண்டையோடுக்கு சொந்தமான மனிதர், உலகில் சுனாமியால் பலியான பழமையான நபர் என்று முடிவுக்கு வந்துள்ளோம்,” என்று பேராசிரியர் கோஃப் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.