குருபூஜை பாதுகாப்பு டிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

மதுரை:  காளையார்கோவிலில் வரும் 27ம் தேதி மருதுபாண்டியர் குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் வரும் 30ம் தேதி முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நடக்கிறது. இதில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தலைமையில், மதுரையில் நேற்று நடந்தது.  இதில் ஏடிஜிபி விஜயகுமார், தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், டிஐஜி பிரவீண்குமார் உட்பட 9 மாவட்ட எஸ்பிக்கள் பங்கேற்றனர்.

Rajendran