தந்தையின் கண்டிப்பு; நள்ளிரவில் மாயமான சிறுமி!

அமெரிக்காவில் இரண்டு வாரங்களுக்கு முன் மாயமான இந்திய சிறுமியை தேடும் பணியில் ஆளில்லா விமானங்களை பொலிசார் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (15)அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரிச்சர்ட்சன் நகரில் மனைவி மற்றும் 4 வயது சொந்த மகள் மற்றும் 3 வயது வளர்ப்பு மகள் ஷெரின் மேத்யூசுடன் வசித்து வந்தவர் தந்தை வெஸ்லி மேத்யூஸ்.

சம்பவத்தன்று, சிறுமி ஷெரின் பால் குடிக்க மறுத்துளாள். இது அவளது வளர்ப்பு தந்தை வெஸ்லிக்கு கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.

உடனே அவர் அந்த சிறுமியை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வெளியே நடைபாதையில் விட்டு விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் அந்த சிறுமி அப்பகுதியில் இருந்து மாயமானாள்.

இது குறித்து அவர், ரிச்சர்ட்சன் நகர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சுற்று வட்டாரப்பகுதிகளில் அந்த சிறுமியை பொலிசார் தேடியுள்ளனர். ஆனால் சிறுமி என்ன ஆனாள் என்றோ, எங்கு போனாள் என்றோ தெரியவில்லை.

இந்த நிலையில் சிறுமி மாயமான 2 வாரங்களுக்கு பின்னர் அவரை தேடும் பணியில் ஆளில்லா விமானங்களை பொலிசார் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி கெவின் பெர்லிச் கூறுகையில், “அவளை உயிருடன் கண்டுபிடிக்க முடியும் என்று நாங்கள் உறுதியுடன் நம்புகிறோம்.

ஆனால் நேரம்தான் எங்கள் எதிரியாக உள்ளது. முடிந்தளவுக்கு அவளை விரைவாக கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் இந்த வழக்கில் சிறுமியின் வளர்ப்பு பெற்றோரான வெஸ்லி தம்பதியர், ஒத்துழைக்க மறுப்பதாக பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே இந்திய வம்சாவளியான வெஸ்லி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சம்பவம் நடந்து 14 நாட்களாகியும் சிறுமி ஷெரின் பற்றி சரியான தகவல்கள் கிடைக்காமல் பொலிசார் திணறி வருகின்றனர். ஆனால் இதுவரை பொதுமக்களின் உதவி கேட்டு கோரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.