டெங்கு நோய் தொற்றால் மீண்டும் ஒரு குடும்ப பெண் யாழில் உயிரிழந்துள்ளார்.
இணுவிலை சேர்ந்த 48 வயதுடைய மல்லீகா தேவி என்ற பெண் ஒருவர் 5 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.
தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று அது பயனளிக்க வில்லை என்பதால் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலைக்கு சிகிச்சை பெற நேற்று(15) சென்றுள்ளார்.
சிகிச்சை பெற வரிசையில் இருந்தபோது குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை நேற்று யாழ் நகரில் டெங்கு நோய் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது