தேங்காயின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

தேங்காய் ஒன்றை, 65 ரூபாய்க்கு இன்று முதல் கொள்வனவு செய்யமுடியும் என்று தெங்கு உற்பத்தி சபை அறிவித்துள்ளது.
அரசாங்கத்திடம் கைவசம் இருக்கின்ற ஒருதொகுதி தேங்காய்கள், சந்தைக்கு இன்று விடப்படும்.

நடமாடும் வண்டிகளை கொண்டு, விற்பனை செய்யப்படும் இந்த தேங்காய்கள், இனங்கண்டுகொள்ளக்கூடிய வகையில், வர்ணம் தீட்டப்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்திச் சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்தார்.img

தேங்காயின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்:ஒரு தேங்காய்க்குரிய விலை இதுதான்!

இதேவேளை, சதொச விற்பனை நிலையங்களிலும், குறைந்த விலையில் தேங்காய்களை இன்று(02) முதல் கொள்வனவு செய்துகொள்ளமுடியும்’ என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட வரட்சியான வானிலை காரணமாக, தெங்கு உற்பத்தி, பாதிப்படைந்திருந்தது.
ஆகையால், நாட்டுக்குள் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலேயே, கூடுதலான தாக்கத்தை இது செலுத்தியது.

அதனடிப்படையில், தேங்காய் ஒன்று, 80 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் இடையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.