இன்று யாழில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியாவை கொலை செய்ய குற்றவாளியை பாதுகாப்பதற்கு உதவியவர்களை கைது செய்யுமாறு கோரி இன்று யாழில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

ilanஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் சுவிஸ் குமாருக்கு உதவிய சட்டத்தரணி தமிழ்மாறனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது

வித்தியா கொலையின் பிரதான குற்றவாளி சுவிஸ் குமார் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை விடுவிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் சட்டத்தரணி தமிழ்மாறன் உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுவரொட்டிகள் யாழில் பல இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன.